Archives: மார்ச் 2021

ஞானமாக களையெடுப்பது

என் பேரக்குழந்தைகள் என் கொல்லைப்புறத்தை சுற்றி ஓடிக்கொண்டிருந்தார்கள். விளையாடிக்கொண்டிருந்தார்களா? இல்லை, களைகளை பிடுங்கிக்கொண்டிருந்தார்கள். “வேரோடு அவற்றைப் பிடுங்குகிறேன்” என்று இளைய குழந்தை கூறி எனக்கு மிகப்பெரிய பரிசைக் காட்டினாள். அந்த நாளில் நாங்கள் கடினமாக முயற்சித்து களைகளை சமாளிக்கும் போது அவளுடைய மகிழ்ச்சியானது, களைவேர்களை பிடுங்குவதை - ஒவ்வொரு தொல்லைதரும் அச்சுறுத்தலையும் நீக்குவதை நாங்கள் எவ்வளவு ரசிக்கிறோம் என்பதாகும். எனினும், சந்தோஷங்களுக்கு முன்பு அவைகளை செய்ய முடிவெடுக்கும் தேர்ந்தெடுப்பு வந்தது.
 
குறிப்பிட்ட நோக்கத்துடன் களையெடுப்பது தனிப்பட்ட பாவத்தை அகற்றுவதற்கான முதல் படியாகும். தாவீது இவ்வாறு ஜெபித்தார்: “தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்... வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து” (சங்கீதம் 139: 23-24).

என்ன ஒரு ஞானமான அணுகுமுறை, நம்முடைய பாவத்தை நமக்குக் வெளிப்படுத்திக்காண்பிக்கும்படி தேவனிடம் கேட்டு அதைப் பின்பற்றுவது. எல்லாவற்றிற்கும் மேலாக அவர் நம்மைப் பற்றி எல்லாவற்றையும் அறிந்தவர். “கர்த்தாவே நீர் என்னை ஆராய்ந்து அறிந்திருக்கிறீர்”. சங்கீதக்காரன் எழுதுகிறார், “என் உட்காருதலையும் என் எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர்; என் நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறீர்” (வச. 1-2).

“இந்த அறிவு எனக்கு மிகுந்த ஆச்சரியமும் எனக்கு எட்டாத உயரமுமாயிருக்கிறது (வச. 6). பாவம் வேரூன்றுவதற்கு முன்பே, தேவன் ஆபத்தை நமக்கு முன்னமே எச்சரிக்க முடியும். அவர் நம்மை உள்ளும் புறமுமாக அறிவார். ஆகவே, ஒரு ரகசியமான பாவமனப்பான்மை நம்மில் வேரூன்ற முயற்சிக்கும்போது, ​​அவர் அதை முதலில் அறிந்து, சுட்டிக்காட்டுகிறார்.

“உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்?”, தாவீது எழுதுகிறார். “உம்முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்?” (வச. 7). நம்முடைய இரட்சகரை உயர்ந்த ஒழுக்க மேன்மையுடன் நெருக்கமாக பின்பற்றுவோம்.

உன் மூக்கை பிடுங்கி விட்டேன்

“சிலைகளின் மூக்கு ஏன் உடைக்கப்பட்டிருக்கிறது?” புரூக்ளின் அருங்காட்சியகத்தில் எகிப்திய கலையின் கண்காணிப்பாளரான எட்வர்டை பார்வையாளர்கள் கேட்கும் முதல் கேள்வி இதுதான்.

அன்றாட பயன்பாட்டினால் ஏற்படும் சாதாரண சேதம் என்று அவை சேதம் அடைந்திருப்பதை குறித்து எட்வர்ட் குறை கூற முடியாது. ஏனெனில், சுவரிலுள்ள இருபரிமாண சித்திரங்களிலும் மூக்கு பகுதியை காணவில்லை. அத்தகைய அழிவு வேண்டுமென்றே இருந்திருக்க வேண்டும் என்று அவர் கருதுகிறார். எதிரிகள் எகிப்தின் தேவர்களைக் கொல்ல வேண்டுமென உத்தேசித்திருந்தனர். இது அவர்களுடன் “உன் மூக்கை பிடுங்கி விட்டேன்” என்ற விளையாட்டை அவர்கள் விளையாடுவது போல் இருக்கிறது. படையெடுத்துவந்த வீரர்கள் அந்த விக்கிரகங்களின் மூக்கை உடைத்தனர் அதனால் அவற்றால் சுவாசிக்க முடியாது என்றெண்ணினர்.

அப்படியா? அவ்வளவுதானா? இது போன்ற தேவர்களை வைத்திருப்பதால் தான் சிக்கலில் இருப்பதை பார்வோன் அறிந்திருக்க வேண்டும். ஆம், அவருக்கு இராணுவமும், முழு தேசத்தின் விசுவாசமும் துணையாக இருந்தது. சோர்வுற்ற அடிமைகளான எபிரேயர்கள் மோசே என்ற பயந்த தப்பியோடியவரின் தலைமையில் இயங்கினர். ஆனால் இஸ்ரயேலுடன் ஜீவனுள்ள தேவன் இருந்தார், பார்வோனின் தெய்வங்கள் பாசாங்கு செய்பவை. பத்து வாதைகளுக்குப் பிறகு, அவர்களின் கற்பனை வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

இஸ்ரயேலர் புளிப்பற்ற அப்பத்தை ஒரு வாரத்திற்கு சாப்பிட்ட போது, புளிப்பற்ற அப்பத் திருவிழாவுடன் தங்கள் வெற்றியை கொண்டாடினார்கள். (யாத்திராகமம் 12:17; 13: 7-9). புளிப்பு பாவத்தை அடையாளப்படுத்துகிறது. மேலும் தங்களுடைய மீட்கப்பட்ட வாழ்க்கை முற்றிலும் அவருக்கே உரியது என்று அவருடைய மக்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று தேவன் விரும்பினார்.

நம் பிதா விக்கிரகங்களிடம் , “உங்கள் மூக்கை பிடுங்கி விட்டேன்” என்றும் அவருடைய பிள்ளைகளிடம் “உங்கள் வாழ்வு கிடைத்தது” என்றும் கூறுகிறார். உங்களுக்கு சுவாசத்தை கொடுக்கும் தேவனை சேவியுங்கள், அவருடைய அன்பான கரங்களில் இளைப்பாருங்கள்.

தேவனுடன் போரை எதிர்கொள்வது

அமெரிக்க இராணுவ சிப்பாய் டெஸ்மண்ட் டோஸின் வீரச்செயல்கள் 2016 திரைப்படமான ஹாக்ஸா ரிட்ஜில் இடம்பெற்றுள்ளன. டோஸின் நம்பிக்கைகள் அவரை மனித உயிரைப் பறிக்க அனுமதிக்காது, நன்கு பயிற்சிபெற்ற ஒரு இராணுவ வீரராக அவர் சொந்த உயிரை பணயம் வைத்து மற்றவர்களின் உயிரைக் காப்பதில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அக்டோபர் 12, 1945 அன்று, டோஸின்’ மரியாதை பதக்க விழாவில் படித்த மேற்கோள் பின்வரும் இந்த வார்த்தைகளை உள்ளடக்கியிருந்தது: “தனியார் முதல் வகுப்பு டோஸ் மறைத்துக்கொள்ள முயலாமல், தீப்பிடித்திருத்த பகுதியில் பாதிக்கப்பபட்டிருந்த பலருடன் இருந்து
, அவர்களை ஒவ்வொருவராக நீண்ட குன்றின் விளிம்பிற்கு கொண்டு சென்றார் . . . . ஒரு பீரங்கி அதிகாரிக்கு உதவுவதற்காக அவர் எதிரியின் வெடிகுண்டு தாக்குதல்கள்  மற்றும் சிறிய ஆயுதத் துப்பாக்கிகளைத் தயக்கமின்றி எதிர்கொள்ளத் துணிந்தார்."
 
சங்கீதம் 11-ல், நான் கர்த்தரை நம்பியிருக்கிறேன் என்ற தாவீதின் நம்பிக்கை, தனது எதிரிகளை எதிர்கொள்ளாமல் தப்பித்து ஓடிவிடலாம் என்ற அறிவுரைகளை எதிர்க்க அவனை கட்டாயப்படுத்தியது (வச. 2–3). மூன்று எளிய வார்த்தைகள் அவருடைய விசுவாச அறிக்கையை உள்ளடக்கியது: “நான் கர்த்தரை நம்பியிருக்கிறேன்” (வச. 1). நன்கு வேரூன்றிய நம்பிக்கை அவரது நடத்தைக்கு வழிகாட்டும்.

4-7 வசனங்களில் உள்ள தாவீதின் வார்த்தைகள் தேவனுடைய மகத்துவத்தை விரிவாக விவரித்தது. ஆம், வாழ்க்கை சில நேரங்களில் ஒரு யுத்தக்களம் போல இருக்கக்கூடும். மேலும் உடல்நல சவால்கள் அல்லது பணரீதியான, உறவு முறைகள் பற்றிய அல்லது ஆவிக்குரிய அழுத்தங்களால் நாம் தொடர்ந்து தாக்கப்படும்போது விரோத நெருப்பு மறைவிடத்திற்கு நேராக நம்மை சிதறடிக்கும் எனில், நாம் என்ன செய்ய வேண்டும்? தேவன்தான் இப்பிரபஞ்சத்தின்  ராஜா என்பதை ஒப்புக்கொள்ளுங்கள் (வச. 4); துல்லியமாக நியாயந்தீர்க்கும் அவருடைய ஆற்றலில் மகிழ்ச்சிகொள்ளுங்கள் (வச. 5-6); செம்மைகள், நியாயங்கள் மற்றும் நடுநிலைகளில் அவர் களிகூருவதில் நீங்கள் இளைப்பாருங்கள் (வச. 7). புகலிடத்திற்காக நாம் விரைவாக தேவனிடம் ஓட முடியும்!

என்னை கவனி!

என் தேவதை நடனத்தை பாருங்கள் பாட்டி! என்று என் மூன்று வயது பேத்தி மகிழ்ச்சியுடன் அழைத்தாள். முகத்தில் ஒரு பெரிய சிரிப்புடன் எங்கள் அறையின் முற்றத்தை சுற்றி அவள் ஓடினாள். அவளுடைய “நடனம்” புன்னகையைக் கொண்டு வந்தது; மற்றும் “அவள் நடனமாடவில்லை, ஓடுகிறாள்” என்ற அவளுடைய பெரிய சகோதரனுடைய கடினமான வார்த்தைகள், குடும்பத்துடன் விடுமுறையில் இருப்பதில் அவள் கொண்டிருந்த மகிழ்ச்சியைக் குறைக்கவில்லை.

முதல் குருத்தோலை ஞாயிறு என்பது உயர்வு மற்றும் தாழ்வின் நாள். இயேசு கழுதை மீதேறி எருசலேமுக்குச் சென்றபோது ​​திரளான ஜனங்கள்: “கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்!” (மத்தேயு 21: 9) என்று உற்சாகமாக ஆர்ப்பரித்தார்கள். ஆயினும் கூட்டத்தில் இருந்த பலரும் மேசியா அவர்களை ரோமர்களிடமிருந்து விடுவிப்பார் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் அதே வாரத்தில் அவர்கள் செய்த பாவங்களுக்காக மரிக்கவிருக்கும் இரட்சகரை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

அந்த நாளின் பிற்பகுதியில் இயேசுவின் அதிகாரத்தை கேள்விக்குட்படுத்தி பிரதான ஆசாரியர்கள் கோபத்திலிருந்தபோதிலும் அத்தேவாலயத்திலிருந்த குழந்தைகள் “தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா” என ஆர்ப்பரித்து தங்களுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தினர் (வச.15). ஒருவேளை முற்றத்தை சுற்றி ஓடும்போது குதித்து பனை ஓலைகளை அசைக்கலாம். அவர்களால் அவரை ஆராதிக்காமல் இருக்க முடியவில்லை, இயேசு கோபமாக இருந்த தலைவர்களிடம், “குழந்தைகளுடைய வாயினாலும் பாலகருடைய வாயினாலும் (உம்முடைய) துதி உண்டாகும்படி செய்தீர்” (வச. 16) என்றார். அவர்கள் இரட்சகருடைய பிரசன்னத்தில் இருந்தார்கள்.

அவர் யார் என்பதற்காக அவரைக் காணவும் இயேசு நம்மை அழைக்கிறார். சந்தோஷத்தில் நிரம்பி வழியும் குழந்தையைப்போல நாமும் செயல்படும்போது நிச்சயமாக அவர் பிரசன்னத்தில் மகிழ்ந்திருப்போம்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

சோதனைகளை மேற்கொள்ளுதல்

ஆனி, வறுமையிலும் வேதனையிலும் வளர்ந்தார். அவளுடைய இரண்டு உடன்பிறப்புகள் குழந்தை பருவத்திலேயே இறந்துவிட்டனர். ஐந்து வயதில், ஒரு கண் நோய் அவளை ஓரளவு பார்வையற்றதாகவும், படிக்கவோ எழுதவோ முடியாமல் ஆக்கினது. ஆனிக்கு எட்டு வயதாக இருந்தபோது, அவரது தாயார் காசநோயால் இறந்தார். சிறிது காலத்திற்குப் பிறகு, அவளை துஷ்பிரயோகம் செய்த அவளது தகப்பனார், மூன்று குழந்தைகளை ஆதரவற்றவர்களாய் விட்டுவிட்டார். இளைய பிள்ளை வேறு உறவினர்களுடன் தங்கிக்கொள்வதற்கு அனுப்பப்பட்டது. ஆனியும் அவளது சகோதரரும் அரசு நடத்தும் அனாதை இல்லத்திற்குச் சென்றனர். சில மாதங்களுக்குப் பிறகு, ஜிம்மியும் இறந்துவிட்டான். 
பதினான்கு வயதில், ஆனியின் சூழ்நிலைகள் பிரகாசமாகின. அவள் பார்வையற்றோருக்கான பள்ளிக்கு அனுப்பப்பட்டாள். அங்கு அவள் பார்வையை மேம்படுத்த அறுவை சிகிச்சை செய்துகொண்டு படிக்கவும் எழுதவும் கற்றுக்கொண்டாள். அவள் அந்த இடத்தில் வாழ்வதற்கு சிரமப்பட்டாலும், அவள் கல்வியில் சிறந்து விளங்கி, வாலிடிக்டோரியனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டாள். ஹெலன் கெல்லரின் ஆசிரியை மற்றும் தோழியான ஆனி சல்லிவன் என இன்று நாம் அவளை நன்கு அறிவோம். முயற்சி, பொறுமை மற்றும் அன்பின் மூலம், ஆனி பார்வையற்ற மற்றும் காது கேளாத ஹெலனுக்கு பேசவும், பார்வையற்றோருக்கான பிரெய்லி படிக்கவும், கல்லூரியில் பட்டம் பெறவும் கற்றுக் கொடுத்தார். 
யோசேப்பும் தன் வாழ்க்கையில் பல சோதனைகளை கடக்க வேண்டியிருந்தது. பதினேழாவது வயதில், அவர் மீது பொறாமைப்பட்ட சகோதரர்களால் அடிமையாக விற்கப்பட்டார். பின்னர் செய்யாத குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார் (ஆதியாகமம் 37:39-41). ஆயினும் எகிப்து தேசத்தையும் அவனது சொந்த குடும்பத்தாரையும் பஞ்சத்திலிருந்து காப்பாற்ற தேவன் அவனைப் பயன்படுத்தினார் (50:20). 
நாம் அனைவரும் சோதனைகளையும் பிரச்சனைகளையும் சந்திக்கிறோம். ஆனால் யோசேப்பு மற்றும் ஆனி ஆகியோருக்கு மற்றவர்களின் வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்த தேவன் உதவியது போல, நமக்கும் உதவிசெய்து நம்மை பயன்படுத்த அவரால் கூடும். உதவிக்காகவும் வழிகாட்டுதலுக்காகவும் அவரை சார்ந்துகொள்வோம். அவர் நம்மை பார்க்கிறார், கேட்கிறார். 

தேவனில் சாய்ந்துகொள்!

சில நண்பர்களுடன் நாங்கள் தண்ணீர் பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்தபோது, காற்றடைக்கப்பட்ட தளங்களால் செய்யப்பட்ட மிதக்கும் தடைப் பாதையில் நடக்க முயற்சித்தோம். துள்ளலான, வழுக்கும் தளங்கள் மீது நேராக நடந்துசெல்வது என்பது சாத்தியமற்றது. சரிவுகள், பாறைகள் மற்றும் பாலங்கள் வழியாக நாங்கள் தள்ளாடியபோது, நாங்கள் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் விழுந்து கூச்சலிட நேரிட்டது. என் தோழிகளில் ஒருத்தி, முற்றிலும் களைத்துப்போய், மூச்சு விடுவதற்காக “கோபுரம்” ஒன்றில் சாய்ந்து இளைப்பாறினாள். அவளுடைய உடல் எடை தாங்க முடியாமல், மீண்டும் வழுக்கிக்கொண்டு வந்து தண்ணீரில் விழுந்தாள்.  
தண்ணீர் பூங்காக்களில் காணப்படும் இதுபோன்ற பெலனில்லாத கோபுரம் போலில்லாமல், வேதாகம காலகட்டங்களில் ஒரு கோபுரம் மிகவும் பாதுகாப்பானதாக திகழ்ந்தது. நியாயாதிபதிகள் 9:50-51, தேபேஸ் மக்கள் தங்கள் நகரத்தின் மீது அபிமெலக்கின் தாக்குதலிலிருந்து மறைந்து கொள்ள “பலத்த துருக்கத்திற்கு” எவ்வாறு விரைந்து ஓடினர் என்பதை விவரிக்கிறது. நீதிமொழிகள் 18:10இல், ஆசிரியர் தன்னை நம்புகிறவர்களை விடுவிக்கும் தேவனை பலத்த துருக்கமாய் உருவகப்படுத்துகிறார்.  
இருப்பினும், சில சமயங்களில், நாம் சோர்வாக இருக்கும்போது அல்லது காயப்படும்போது தேவனுடைய பலத்த துருக்கத்தின் மீது சாய்வதற்குப் பதிலாக, பாதுகாப்பு மற்றும் ஆதரவிற்காக - தொழில், உறவுகள் அல்லது உடல் வசதிகளுக்காக வேறு விஷயங்களைத் தேட நேரிடுகிறது. செல்வத்தில் பலம் தேடும் ஐசுவரியவான்களிடமிருந்து நாம் வேறுபட்டவர்கள் அல்ல (வச. 11). ஆனால் காற்றடைக்கப்பட்ட கோபுரம் எனது சிநேகிதியை தாங்க முடியாதது போல், இந்த விஷயங்கள் நமக்கு உண்மையில் தேவையானதை கொடுக்க முடியாது. ஆனால் சர்வ வல்லமையுள்ள, சகலத்தையும் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் தேவன் நமக்கு மெய்யான ஆறுதலையும் பாதுகாப்பையும் தருகிறார். 

தேவன் போதுமானவர்

எலன், பண நெருக்கடியில் இருந்தாள். எனவே கிறிஸ்மஸ_க்கு கிடைக்கும் போனஸ் பெற்றதில் மகிழ்ச்சியடைந்தாள். அவள் பெற்றுக்கொண்ட பணம் அவளுடைய தேவைக்கு போதுமானதாக இருந்தது. ஆனால் அவள் அந்த பணத்தை வங்கியில் போடும்போது, அவனுக்கு மற்றுமொரு ஆச்சரியம் காத்திருந்தது. கிறிஸ்மஸ் பரிசாக, வங்கி தனது ஜனவரி மாத அடமானத் தொகையை தனது வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்ததாக அவளுக்கு அறிவிக்கப்பட்டது. இப்போது அவளும் அவளுடைய கணவரும் மற்ற செலவுகளை செய்யலாம். இன்னும் யாராவது ஒருவரை கிறிஸ்மஸ் பரிசுடன் ஆச்சரியப்படுத்தக்கூடும்.  
நாம் எதிர்பார்ப்பதை விட தேவன் நம்மை ஆசீர்வதிக்க அவருக்கு வழி தெரியும். நகோமி தனது கணவன் மற்றும் குமாரர்களின் மரணத்தால் கசப்பாகவும் உடைந்தும் இருந்தாள் (ரூத் 1:20-21). அவளது அவநம்பிக்கையான அந்த சூழ்நிலையை போவாஸ் மாற்றினார். போவாஸ் நகோமியின் மருமகளை மறுமணம் செய்து, அவர்கள் தங்குவதற்கான வீட்டையும் கொடுத்தார் (4:10). 
நகோமி எதிர்பார்த்ததும் அதுதான். ஆனால் பின்னர் தேவன் ரூத்துக்கும் போவாஸ{க்கும் ஒரு குமாரனைக் கொடுத்து ஆசீர்வதித்தார். நாகோமிக்கு “ஆத்துமாவுக்கு ஆறுதல்செய்கிறவனும், உன் முதிர்வயதிலே உன்னை ஆதரிக்கிறவனுமாயிருக்கக்கடவன்” (வச. 15) என்று பேரன் கொடுக்கப்படுகிறான். அது அவளுக்கு மிகவும் போதுமானதாக இருந்திருக்கும். அதைப் பார்த்த பெத்லகேமின் ஸ்திரீகள், “நகோமிக்கு ஒரு ஆண் பிள்ளை பிறந்தது!” (வச. 17) என்று சொன்னர்கள். பின்னர் சின்ன ஓபேத் வளர்ந்து, “தாவீதின் தகப்பனாகிய ஈசாயின் தகப்பனாய்” ஆனார் (வச. 17). நகோமியின் குடும்பம் வரலாற்றில் மிக முக்கியமான வம்சமான இஸ்ரவேலின் ராஜ வம்சத்தைச் சேர்ந்தது! அதுவே போதுமானதாக இருந்திருக்கும். இருப்பினும், தாவீது இயேசுவின் முற்பிதாவாய் மாறினார். 
நாம் கிறிஸ்துவை விசுவாசித்தால், நகோமியின் ஆசீர்வாதங்கள் நமக்கும் கிட்டும். அவர் நம்மை மீட்கும் வரையில் நம்மிடத்தில் எதுவும் இல்லை. இப்போது நாம் நம் தகப்பனால் முழுவதுமாய் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளோம். அவர் மற்றவர்களை ஆசீர்வதிக்க நம்மை ஆசீர்வதிப்பார். இது நம்மடைய தேவையைக் காட்டிலும் அதிகமானது.